Sunday, May 16, 2010

காதல் கல்வெட்டு!

வசீகரன் காரை ஸ்டார்ட் செய்தான். வழி நெடுகிலும் அவனுக்கு வலி தரும் காட்சிகளையே கண்டான். ஆங்காங்கே குடைக்குள்ளும் சீமேந்து கட்டுகளிலும் காதலர்கள் இவ்வுலகை மறந்து தத்தமக்குரிய தனிமையான, இனிமையான, புதுமையான ஒரு உலகத்துக்குள் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

சென்ற வருடம் இதே நேரத்தில் எத்தனை உற்சாகமாகவும,; தவிப்புடனும் இருந்தான்.

ஓ... நிஷ்மிதா! வசீகரன் வாய்விட்டு அழுதான். அந்த சந்தோஷமும் பாதி தானே? பி.கொம் முடித்து விட்டு தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் வசீகரனிடம் அதிகாலைகளில் ~வோக்கிங்| செல்லும் பழக்கம் அவனது பதினொரு வயது தொடக்கம் கடமை போன்றே ஆகி விட்டிருந்தது.

அன்றும் அப்படித்தான். வழமையாக அவன் ~வோக்கிங்| போகும் பாதையில் வானை முட்டும் உயரமாக கட்டப்பட்டுள்ள அந்த கட்டிடத்தை எண்ணி பிரமித்து ஒவ்வொரு தட்டாக எண்ணினான். ஒரு நிமிடம்... கடவுளே! அகோர ஒலி எழுப்பிய அவன், லிப்ட் இருப்பதையும் மறந்து மாடிப்படி வழியாக விரைந்து ஓடிப்போய் பார்த்தான். இன்னும் ஒரே ஒரு செக்கனை வீணாக்கினாலும் அவ்வளவு தான். துரிதமாக செயல்பட்டு அவளைப்பிடித்து பின்னால் இழுத்து ஓங்கி ஒரு அறை விட்டான். எதிர்பாராத இந்த தாக்குதலினால் அதிர்ச்சியடைந்த அவள் அவனை மிரட்சியுடன் நோக்கினாள்.

~~ஏய் யாரு நீ? எதுக்கு தற்கொலைக்கு முயற்சி பண்ணினே?||
~~விழுந்திருந்தா எலும்பு கூட மிஞ்சாது தெரியுமில்ல..?||
~~......................||
அவள் மௌனங்களை விடையாகப் பகர்ந்தாள்.

சற்று நேரம் அவளை விட்டு விட்டு வசீகரனே மீண்டும் பேசினான்.

~~ என்ன எக்ஸேம்ல தோத்துட்டியா? இல்ல லவ் பெயிலியரா? ம்ம்.. இல்லேன்னா எவன்கிட்டயாவது...?||

அவன் முடிக்கு முன்னே அவள் சீறினாள்.

~~ ஏய் மிஸ்டர்! நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? எதுக்காக என்னை காப்பாத்தினீங்க?||

ஒரு கணம் ஆடிப்போனான் வசீகரன். தயங்கிய படி அவளிடம் மன்னிப்பு கேட்டான்.

அவன் அப்படி இரங்கி வந்து தன்னிடம் பேசிய போது அவளுக்கு என்னவோ போல் இருந்தது. தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். ஏனோ வசீகரனுக்கும் மீண்டும் மீண்டும் அவளிடம் காரணம் கேட்க வெட்கமாக இருந்தது.

அந்த தற்கொலைக்காரியான நிஷ்மிதாவுக்கு வாழ்வே வெறுத்தது. இந்த சமூகம் இப்படித்தான். நல்லாயிருந்தால் வாழவும் விடாது. கெட்டுப்போனால் சாகவும் விடாது. படிக்கும் பருவத்தில் அவளது கையெழுத்து அழகில்லை என்றாலும் தலையெழுத்து நல்லாயிருக்கும் என்று தோழியர் கூறிய போது நம்பினாளே...

இப்போது கத்தி அழ வேண்டும் போல் இருந்தது. தன் மீது சுமத்தப்பட்ட இந்த ஆயுள் காயத்தை எப்படி போக்குவது என்று அறியாமல் கண்ணீரை துணைக்கழைத்தபடி அவள் தூங்கிப் போனாள். காலையில் அவள் தன் தோழியின் ஞாபகமாக எடுத்து வந்த முற்றத்து ரோஜாவை ரசித்துக் கொண்டிருந்தாள்.

~~இந்த ரோஜாப்பூ கூட எத்தனை அழகானது. என் வாழ்வில் மட்டும் ஏன்...?||

அவளது மனதுக்குள் வெறுமை நிறைந்து மூச்செடுக்க தடை செய்தது.

அப்போது பார்த்து தூரத்தில் வசீகரன்; அவளுக்கு கைகாட்டி சிரித்து விட்டுச் சென்றான். தன் இதயத்தைப் பிடித்து யாரோ சிறகுகளை பொருத்தி வானத்தில் பறக்க விட்டது போல் உணர்ந்தாள். எனினும் அதற்கான காரணம்; அப்போதைக்கு விளங்கவில்லை.

ம்... நிஷ்மி குட்டிக்கு என்ன வாங்கலாம்?
காதலர் தின கார்ட், உயிருள்ள பூனைக்குட்டி, நகைகள்...

எதை வாங்குவதென்று தவித்தான் வசீகரன்.

~~இவ என் காதலை ஏத்துக்கணுமே... ஏத்துக்குவாளா? சிவ சிவா||

ஒரு நாளுமில்லாமல் கடவுளையும் வம்புக்கு இழுத்துக் கொண்டான்.

நாளை காதலர் தினம்!

வழமை போல அடுத்த நாள் காலை ஒரு பார்சலை அவளுக்;கு கொடுத்து விட்டு அவள் கண்களில் தன் உருவம் பார்த்தான். பிறகு தன் இதயத்தை அவளுக்கு தர இருப்பதாக சாடைமாடையாக தன் காதலைக் கூறினான்.

அவனுடைய காதல் இப்படி அவளது கண்ணீரில் மிதக்கும் என்று நினைத்திருப்பானா? அவனது பார்சலை அவனிடமே திணித்து விட்டு அழுது கொண்டே சென்றாள் நிஷ்மிதா.

~~ச்சீ.. எவ்வளவு பெரிய தப்பை செய்யவிருந்தோம்? அன்றைய அவளது வினாவிற்கான விடை இப்போது அவளுக்கு கிடைத்து விட்டது. அவளும் அவனைக் காதலிக்கிறாளா?
வெளிமனம் ஆனந்தத்தால் துள்ளிப் பாய்ந்தாலும் ஆழ்மனம் எச்சரித்து அவஸ்தைப்படுத்தியது.

~~அதை|| அவன் எப்படித் தாங்குவான்? ஆனால் அவளால் மட்டும் சொல்லத்தான் முடியுமா? வசீகரனின் அன்புத் தொல்லை வாழ்நாள் பூராக வேண்டும் போல் இருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து இருவரும் சந்திக்க நேர்ந்தது. சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பாத நிஷ்மிதா அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.

அதை வசீகரன் புரிந்து கொண்டானோ என்னவோ? அவள் சொல்லப் போவது தனக்குத் தெரியும் என்று கூறி விட்டு அனைத்தையும் கூறி சரி தானே என்றான்.

சிலையாகி நின்ற நிஷ்மிதாவை தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டான். விதியின் கைகள் இத்தனை வலிமையானதா? என நொந்து கொண்டாள் நிஷ்மிதா.

~~சொரி நிஷ்மி உன் அனுமதி இல்லாமல் உன் மெடிக்கல் ரிப்போட்ஸ் பார்த்துட்டேன்|| என்று கூறி தலையைக் கவிழ்த்துக் கொண்டான்.

இந்த ஒரு வாக்கியம் போதுமே... அவள் அழவில்லை. மனசு கல்லாகியிருந்தது. அவன் தான் வெடித்தழுதான். பின் சமாதானம் கூறினான்.

~~வசீ...||

~~ம்ம்... என்னம்மா||

~~என்னை மறந்துருடா. நான் உனக்கேத்த பொண்ணில்ல||

~~ச்சீ வாயை மூடு||

~~ஐ லவ்யூ லவ்யூ னு ஆயிரம் முறை சொல்ற. நான் சொல்றத கேட்க மாட்டியா?||

~~கொஞ்சம் உன் கழுத்தை அறுக்குறேன். வலியைப் பொறுத்துக்க என்பது போல தானே நீ பேசுறே... உனக்காக எதையும் செய்கிறேன். ஆனால் உன்னை இழக்க மாட்டேன்.||

இத்தனை உறுதியாகக் கூறும் இவனை கட்டிப்பிடித்து அழ நினைத்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டாள். தன்னைப் பற்றிய அத்தனை தகவல்களையும் அறிந்தும் அவள் தான் வேண்டும் என்கிறானே... இவன் தான் சரியான கணவனாக இருக்க முடியுமோ? இதயத்தில் வலியுணர்ந்தாள்.

~~சரி ஒரு வருஷம் கழிச்சி இதே நேரம் காதலர் தினத்தில் சந்திப்போம். அதற்குள் எனக்கு எதுவும் நடக்கலாம். உருமாறிப் போகலாம். ஏன் செத்தாலும் செத்துருவேன்|| என்றாள்.

~~இப்படி பேசினால் நானே உன்னைக் கொன்னுட்டு நானும் செத்துருவேன்|| என்றான் வசீகரன்.

~~பார்க்கலாம். அடுத்த வருடம் இதே நேரம் நீ வர்ரப்ப உன் மனசு கண்டிப்பா மாறி இருக்கும். அப்பயும் மாறலேன்னா காதலர் தினத்துல உன்னோடு எனக்கு முதலிரவு. அட... கல்யாணம்பா.

பார்க்கலாம் நிஷ்மி. ஒரு வருஷம்கிறது அதிக காலம் தான். ஆனால் என் காதலை நிரூபிக்கிறேன். எனக்காக காத்திரு|| என்று கூறி அவள் இதழ்களைக் கவ்வி முத்தமிட்டு விடை பெற்றான்.

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

;வசீகரன் இப்போது காரை மிக வேகமாக செலுத்தினான். நிஷ்மிதா சொன்ன அந்த நாள் இன்று தானே.. அப்படியானால் இன்றிரவு இருவரும் ஒருவராகி விடுவோமா என்று கற்பனையில் லயித்திருந்தான் வசீ.

அந்த கட்டிடம் அப்படியே கம்பீரமாக காட்சி தந்தது. அதை நெருங்க நெருங்கத்தான் அவள் உள்ளத்தில் தீ பற்றியது. மெதுவாக இறங்கி மாடிப்படி ஏறி....

~~யாரங்கே என் நிஷ்மிதாவா?||

சந்தேகமேயில்லை. முகம் கறுத்து உடல் மெலிந்திருந்தாள்.

நல்லா இருக்கியாடா வசீ?

அவனுக்கு கண்ணீர் பீறிட்டது. பெருமூச்சுடனே அவளருகே உட்கார்ந்தவன் சுகம் கூட விசாரிக்காமல்.. ஐ லவ் யூ டா என்றான்.

~~லூசாடா நீ இன்னமும் லவ் பண்றியா?||

~~ என்னம்மா நீ இப்படி கேக்குற|| என்றான்.

அவள் அவனை விநோதமாக பார்த்தாள்.

~~செல்லம்! நீ எனக்குரியவள் மட்டும் தான்டா. உன் கர்ப்பப் பையில உள்ள குறையால நம்ம காதல் எதுவும் பண்ணேலாதுடா. எனக்கு நீ, உனக்கு நான் குழந்தையா இருக்கலாம். இல்லேன்னா தத்தெடுக்கலாம்...||

தன் செலக்ஷன் சரியானதாக இருப்பதாய் அவள் பெருமைப்பட்டாலும் அவனது வம்சம் துளிர் விட்டு வளர தான் குறையுடையவள் தானே என்ற எண்ணம் சந்தோஷத்தை வெட்டிப்போட்டது.

~~செல்லம்மா நீ எதுவும் யோசிக்காத. எனக்கு வாரிசு தர முடியாமல் போயிடும்னு தானே தயங்குற. எனக்கு நீ குழந்தையடி. நீ போதும். வா கார்ல ஏறு.||
என்ற படி அவளை படியிறக்கி கூட்டிச் சென்றான்.

இப்போது...
அவர்களும் காதல் ஜோடி தானே?

காற்றை விட வேகமாக போகச் சொன்னாள். ஐஸ்கிரீம் கேட்டு அடம் பிடித்தாள். ~பீச்சுக்கு| சென்று தண்ணீரில் விளையாடினாள். பழைய உற்சாகம் ஒட்டிக் கொண்டது.

பிறகு அவனுடன் அவனது வீட்டுக்குச் சென்றாள். அவன் வாங்கித்;தந்த நகைகள், சல்வார் செட், மியூசிக் கார்ட், சொக்லேட் என அனைத்தையும் பரப்பி ரசித்தாள். அரை மணி நேரத்துக்குப்பின் அவன் போட்டு வந்த காப்பியை ருசித்தாள்.

பத்து நிமிடங்கள் கழிந்து...

அவன் மஞ்சட் கயிறைக் கொண்டு வந்தான். சடங்கு சம்பிரதாங்களை மறந்து காதலை சாட்சியாக வைத்து மூன்று முடிச்சுகளை இட்டான். மெதுவாக அவளை இழுத்தணைத்து உதட்டை நெருங்க... அவள் கண்களை மூடிக் கொண்டாள்.

காதலர் தினத்தில் இணைந்து விட்ட அவர்களது காதலின் கல்வெட்டுக்கள் காலையில் அவனது கன்னத்திலும் பதிந்திருக்கும்!!!

(நிறைவு)

No comments:

Post a Comment